• முகப்பு
  • crime
  • வீடு குத்தகைப் பணத்தை திருப்பி கேட்டதால் கொலைவெறி தாக்குதல் !

வீடு குத்தகைப் பணத்தை திருப்பி கேட்டதால் கொலைவெறி தாக்குதல் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை அயனாவரத்தில் வசிப்பவர் தருமன் இவருடைய மனைவி சாந்தி இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர், 4 வருடத்துக்கு முன் ஜமுனா என்பவர்களிடம் மகளுக்காக வீடு குத்தகை எடுப்பதற்காக ரூபாய் 1,50,000 கொடுத்து உள்ளனர். பின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த வீடு குடி போக வில்லை. கொடுத்த பணத்தை கேட்கும் பொழுது சிறிது சிறிதாக ஒரு லட்சம் கொடுத்துள்ளார் ஜமுனா, பின் கடந்த இரண்டு 3 வருடமாக பாக்கி தொகையை கொடுக்காமல் அலைக்கழித்து உள்ளனர். சம்பவத்தன்று தருமன் உடைய மகளும் மருமகன் தாமோதரன், பணத்தை கேட்க வில்லிவாக்கத்தில் வசிக்கும் ஜமுனா வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்பொழுது அவருடைய கணவர் மற்றும் மகன் மூவரும் சேர்ந்து பணம் கேட்க வந்த தாமோதரனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தாமோதரனும் அவருடைய மனைவியும் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், பின் கீழ்ப்பாக்கம் மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended