- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சத்தியமங்கல்த்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு திரும்பி வரும்போது இந்தியர்களாக வரவேண்டும் - முகமது ரஃபி
சத்தியமங்கல்த்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு திரும்பி வரும்போது இந்தியர்களாக வரவேண்டும் - முகமது ரஃபி
மகேஷ் பாண்டியன்
UPDATED: May 13, 2023, 7:05:25 PM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜீவ் நகர் ஜீவா மக்கள் சேவை மையத்தில் பல்சமய நல்லுறவு இயக்கம் ஈரோடு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பல்சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் தமிழக அரசின் நல்லிணக்க விருது பெற்ற ஜெ.முகமது ரஃபி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில் இந்துக்கள் கோயிலுக்கு சென்று திரும்பி வரும்போதும், இந்தியனாகவும் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்கு சென்று விட்டு திரும்பி வரும் போதும் இந்தியவனாகவும், கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும் போது இந்தியனாகவும் வர வேண்டும்.
அப்போது தான் நாடு முன்னேறும் நம்மிடம் பணம் அறிவு சொத்து பதவி இருக்கலாம் இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்தால் வாழ முடியாது. இந்தியர்கள் மதத்தால் ஒன்று பட்டால் மட்டுமே ஒற்றுமையாக இருந்து சமூககத்தை பாதுகாக்க முடியும் என உரையாற்றினார்
இந்நிகழ்வில் பல்சமய நல்லுறவு இயக்கம் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.