- முகப்பு
- மாவட்டச் செய்தி
- போளூர் அருகே சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகள், கடைகளை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்
போளூர் அருகே சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகள், கடைகளை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்
மனோஜ் குமார்
UPDATED: May 30, 2023, 12:41:44 PM
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் எட்டியவாடி நெடுஞ்சாலையில் இருந்து ஆரணி வட்டம் நெடுஞ்சாலை சேர்மன் டீக்கடை வரை சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெறுவதால்,
சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியும் கார் பார்க்கிங் அமைத்திருக்கும் இடங்களை களம்பூர் காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் அகற்றி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.