Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பெற்றோர்களே உங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பத்திற்காக அலைய வேண்டியதில்லை. இதோ நாங்கள் கொடுத்துள்ளோம் இதை பிரிண்ட் எடுத்து நிரப்பி அதில் உள்ளபடி தேவையான சான்றுகளை எடுத்துக்கொண்டு மாணவரின் போட்டோவை ஒட்டி பள்ளிக்கு எடுத்து செல்லுங்கள். சரிபார்ப்பிற்காக அனைத்து அசல் சான்றுகளையும் எடுத்து சென்று காண்பித்து விட்டு வரவும். புத்தகங்கள் இருப்பு இருப்பின் சேர்க்கையின் போதே வழங்கி விடுவார்கள். பள்ளியில் கூட்டத்தைப் பொருத்து சேர்க்க நேரம் ஆகும். இந்த படிவத்தை நீங்கள் மிக சரியாக நிரப்பி சென்றால் உங்கள் குழந்தைக்கான சேர்க்கை ஐந்து நிமிடங்களில் முடிந்து விடும். விடுபட்ட சான்றுகளை பிறகு தருவதாக சொல்லியும் சேர்க்கலாம். காரணம் தாசில்தாரால் வழங்கக்கூடிய சான்றுகள் தாமதமாகும். தாமதமாகிறது என்பதற்காக லஞ்சம் கொடுத்து அவசரமாக சான்றுகளை பெற வேண்டாம். பெற்றோர்கள் நலன் கருதி தி கிரேட் இந்தியா நியூஸ் ஸிற்காக செய்தியாளர் பா. கணேசன் .

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0