Author: THE GREAT INDIA NEWS

Category:

நாமக்கல் : கே.புதுப்பாளையத்தில் பாமாருக்மணி நந்தபோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. பாஜக தலைவர் அண்ணாமலை, துணைநிலை ஆளுநர் தமிழிசை, மத்திய இணைஅமைச்சர் முருகன் பங்கேற்றனர். கடலூர் : விருத்தாசலம் தென்னக ரயில்வே முதன்மை பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தென்னக ரயில்வே முதன்மை பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி : கர்நாடக அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது. மதுரை : மேலூர் அருகே மணப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த அறிவியல் ஆசிரியர் பாரதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி : மாமனந்தல் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலியானார். வெடி விபத்தில் கருணாபுரத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். சென்னை : ஆவடி அருகே இரட்டை கொலை வழக்கில் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த ஆவடி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது. தூத்துக்குடி : விமான நிலையத்தில் வைத்து கௌதமன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். கௌதமன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாங்குளத்தில் 144 தடை உத்தரவை மீறி ங்கேற்க வந்த இயக்குநர் கௌதமன் கைது திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விண்ணமங்கலம் யோகலட்சுமி கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் பெருமாள் என்பவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி : முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த சாரதி (எ) அர்ஜுனன் (23) என்பவர் முருகன் என்வரின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் வழக்கு பதிவு செய்து சாரதி (எ) அர்ஜுனன் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 50,000/- மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். சென்னை : காசிமேடில் மீன் வரத்து குறைவாக இருந்ததால், மீன் விலை சற்று உயர்ந்தது.

Tags:

Comments & Conversations - 0