மணப்பாறை அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழப்பு. இரு பள்ளி மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. இதேபோல் மருங்காபுரி அருகே உள்ள எம்.குளவாய்பட்டியில் பயங்கர இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.
அப்போது இடி, மின்னல் தாக்கியதில் அப்பகுதியைச் சேர்ந்த அடைக்கலசாமி (வயது 45) என்பவரது ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள கறவை மாடு கட்டப்பட்டிருந்த இடத்திலேயே உயிரிழந்தது. அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியால் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அவரது இரு மகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் இருந்த இரண்டு வீடுகளின் மின் வயர்கள் தீப்பற்றி எரிந்ததுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மருங்காபுரி வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.