Author: THE GREAT INDIA NEWS

Category: education

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு கலை கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் கி பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 810 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவித்தார்கள். சிதம்பரத்தில் அரசு கலைக்கல்லூரியில் சில ஆண்டுகளாகவே பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை , அரசு கலைக்கல்லூரி தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவு பெற போகிறது, இதுவரை 5 முறைதான் பட்டமளிப்பு விழா நடைபெற்றது என்று கூறப்படுகிறது . இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 25 ஆய்வு கட்டுரைகள், 176 முதுகலை பட்டங்கள் ,606 இளங்கலை பட்டங்கள் , உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இவர்களுடன் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண்துறை அமைச்சர் , சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு 810 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்கள் . பட்டங்கள் பெற்ற மாணவ மாணவிகள் புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர் , தங்கள் பெற்றோரிடம் பட்டங்களை கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டது கண் கொள்ளாகாட்சியாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்பு இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது சிறப்பு வாய்ந்ததாக உள்ளதாக மாணவ-மாணவிகள் கூறினார்கள். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

Tags:

#artscollege #chidambaramartscollege #convocationceremony #students #parents #இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0