கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5 லட்சத்துக்கான காசோலையை அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மேயரிடம் வழங்கினார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணத்தில்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை சீர் செய்தல், சாலை அமைத்தல், போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் சார்பில் 25 சதவீத தொகை வழங்கப்பட்டால் ,75 சதவீத தொகையை அரசு அத்திட்டத்திற்கு நிதி உதவி செய்யும்.
இந்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெகநாத பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் ராயா கோவிந்தராஜ் தான் வசிக்கும் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் வகையில் நமக்கு நாமே திட்டத்திற்காக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார்.
இதில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.