- முகப்பு
- புதுச்சேரி
- திருமாவிடம் ஆளுநர் தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும், புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருமாவிடம் ஆளுநர் தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும், புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
சக்திவேல்
UPDATED: May 6, 2023, 8:22:04 AM
புதுச்சேரியில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை...
விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் புதுச்சேரியில் வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்து இருந்தார்...
மேலும் விழுப்புரம் எம்பி க்கு புதுச்சேரி என்ன வேலை என்றும் கேட்டிருந்தார்...
இதற்கு புதுச்சேரி விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் நீதிமன்ற நுழைவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தமிழிசைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இது குறித்து வழக்கறிஞர் கார்த்திக் கூறும் போது..
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் தமிழிசை உடனடியாக பதவி விலக வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பேசியதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.