• முகப்பு
  • crime
  • அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை . மர்ம நபர்கள் கைவரிசை .சிசிடிவி காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர்.

அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை . மர்ம நபர்கள் கைவரிசை .சிசிடிவி காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த ஆதனூர் ஏவிஎம் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (38). இவர் செங்கல்பட்டு பொதுப்பணி துறையில் கூடுதல் கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். சந்திரா கடந்த வெள்ளிகிழமை அன்று தனது குடும்பத்துடன் சொந்த ஊரான விருத்தாச்சலம் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டைத் திறந்து உள்ளே சென்றபோது பீரோவின் கதவுகள் திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 32 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்று திருடிவிட்டு வீட்டில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்து விட்டு காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டதை அடுத்து கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் தடயங்களை சேகரித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து இதுவரை ஐந்து வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையோடு கூறுகின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended