Author: இர்ஷாத் ரஹ்மத்துல்லா
Category: இலங்கை
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
உயர்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு,தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் வெற்றிடங்கள் குறித்து பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்ததோடு,அரசாங்கம் விதித்துள்ள தாங்க முடியாத வருமான வரி குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
Tags:
#srilankalivenews, #srilankanewsintamil, #srilankanews, #agadhigal #srilankaagadhigal #thegreatindianews # #தமிழ்செய்திகள் #மாகாணசெய்திகள்