- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பரமக்குடியில் சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றித் திரியும் வெறி நாய்களால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அச்சம்.
பரமக்குடியில் சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றித் திரியும் வெறி நாய்களால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அச்சம்.
மாமுஜெயக்குமார்
UPDATED: May 15, 2023, 6:27:53 AM
கோடை காலம் வந்து விட்டாலே வெயில் சுட்டெரிப்பதோடு சாலைகளில் வெறிநாய்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதை நாம் கண் கூடாக காண முடியும்.
அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் பாரதி நகர், ஐந்துமுனை பகுதி, ஓட்டப்பாலம், ஆற்றுப் பாலம் பகுதி, உழவர்சந்தை பகுதி, பெரியகடை பஜார், மாதவன் நகர், காந்தி சிலை சமீபம், சின்னக்கடை பஜார், ஆர்ச் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் சுற்றித் திரிகின்றன.
சாலைகளில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை லொள்... லொள்... லொள்...என்று வாயை பிளந்து கொண்டு ஆக்ரோஷமாக குலைத்து விரட்டி வருவதால் சாலையில் செல்பவர்கள் அச்சம் அடைந்து பதறி...துடித்து... ஓட முயற்சிக்கின்றனர்.
மேலும், சிலர் மனசு பட... படக்க... தனது கையில் வைத்திருக்கும் குடையினால் அதனை தடுத்து நிறுத்த முயற்சிப்பதையும் நாம் அறிய முடிகிறது.
ஒரு சில நேரத்தில், பதறி துடித்து ஓடுபவர்களை கடித்து குதறும் அபாய நிலை உள்ளது. கடித்து குதறி பெரும் ரத்தகாயம், உயிர்ப்பலி என ஏற்படுவதற்கு முன்பாக நகரில் சுற்றித் திரியும் நாய்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, சாலைகளில் சுற்றித் தெரியாதவாறு சம்மந்தப்பட்ட துறையினர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.