• முகப்பு
  • குற்றம்
  • ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 ரவுடிகள்.

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 ரவுடிகள்.

மாரிமுத்து

UPDATED: Mar 31, 2023, 10:27:28 AM

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்  பெபின் செல்வ பிரிட்டோ மற்றும் போலீசார் நேற்று (30.03.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது,

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநாபமங்கலம் குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில்,

அவர்கள் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்துபலவேசம் மகன் தேவராஜ் (20), வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர்களான சுப்ரமணியன் மகன் பேச்சித்துரை (23), முருகன் மகன் அடைக்கலம் (26) மற்றும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த பேச்சி மகன் பொன்இசக்கி (19) என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் ரவுடிகள் தேவராஜ், பேச்சித்துரை, அடைக்கலம் மற்றும் பொன்இசக்கி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி தேவராஜ் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 7 வழக்குகளும், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended