- முகப்பு
- திருவண்ணாமலை மாவட்ட கோயிலில் பாதுகாப்பு பணியில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழை?
திருவண்ணாமலை மாவட்ட கோயிலில் பாதுகாப்பு பணியில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழை?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை மாவட்ட கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் திருவண்ணாமலை மாவட்ட கோயிலில் பாதுகாப்பு பணியில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோயில்களில் பாதுகாப்பு பணிக்காக 101 பாதுகாவலர்கள் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணிபுரிவதற்கு நல்ல ஆரோக்கியமும் திறமையும் மற்றும் 62 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். 40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பின் நல்லது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு 101 காலி பணியிடங்கள் உள்ளன. கோயில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமும் மற்றும் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் கோவில்களுக்கு அருகில் வசிப்பவராக இருத்தல் நல்லது.
பணி புரிய விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் கீழ்காணும் ஆவணங்களுடன் அசல் சான்று, நகல் அடையாள அட்டை, நகல் கைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆகியவற்றுடன் தங்களது பெயரினை திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி.
இன்றைய செய்திகள் திருவண்ணாமலை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் திருவண்ணாமலை,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvannamalai news,crime news,Latest tamil news,Breaking tamil news,anmigam,aanmeegam,anmegam,spiritual,devotional,Thiruvannamalai city