• முகப்பு
  • அரசியல்
  • பாபநாசத்திற்க்கு வருகை புரிந்த முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

பாபநாசத்திற்க்கு வருகை புரிந்த முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 15, 2023, 6:43:25 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அம்மா அரங்கத்தில், தமிழக முன்னாள் வேளாண்மை துறை அமைச்சரும், முன்னாள் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான இரா.துரைக்கண்ணு திருவுருவச் சிலை திறப்பு விழா முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் திருவுருவ சிலையை தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மறைந்த முன்னாள் அமைச்சர் எளிமையாக வாழ்ந்து வந்தவர்..

அனைத்து தரப்பு மக்களும் எளிமையாக அணுக முடியும்..

நியாயமான சிபாரிசுகளை மட்டுமே அவர் அமைச்சராக இருக்கும்போது செய்து வந்தார்..

முன்னாள் வேளாளன் துறை அமைச்சரின் சிலையை திறப்பதற்கு கூட தடையை ஏற்படுத்தியவர் தான் வைத்தியலிங்கம்.

அவருடைய சிலையை ஒற்றை காலில் நின்று மக்களின் பேரா ஆதரவோடும், அதிமுகவின் தொண்டர்கள் ஆதரவோடும் முன்னாள் அமைச்சரின் சிலையை திறந்து கொண்டிருக்கிறேன்..

தீய எண்ணம் கொண்டவர் பெயர் அமைச்சர் சிலை திறப்பு விழாவில் இல்லாமல் போய்விட்டது..

பாபநாசம் தொகுதியை பொறுத்தவரை ஒரு தொண்டனாக இருக்க வேண்டுமென நினைத்தவர் தான் மறைந்த வேளாண் துறை அமைச்சர்..

வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை புரிந்தவர்..

மறைந்த முன்னாள் அமைச்சர் விவசாய குடும்பத்தில் பிறந்தவராக இருந்ததால், விவசாயிகள் குறைகளை புரட்சித்தலைவி ஜெயலலிதாவிடம் பேசி உடனடியாக தீர்வு கண்டவர்.. இவ்வாறு அவர் பேசினார்..

நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பதவிவகித்த முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்றம், சட்டமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களும், அதிமுகவின் முக்கிய முன்னணி நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended