தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தின நிகழ்ச்சி.
ராஜ்குமார்
UPDATED: May 21, 2023, 10:52:08 AM
தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ் பழனி நாடார் ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்க தொண்டர்கள் உறுதியேற்றனர்.
மாநில பேச்சாளர் எஸ் ஆர் பால்துரை, நகர செயலாளர் சௌந்தர், பொருளாளர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள் அருணகிரி சந்திரன், வெயிலுமுத்து, பாலசுப்பிரமணியன், பால்(எ) சண்முகவேல், நாட்டாண்மை ராமராஜ், பிரபாகரன், தெய்வேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.