வந்தவாசி அருகே உழவர் தியாகிகள் தினத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் உழவர் தியாகிகள் தினம் முன்னிட்டு விவசாயிகள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளின் போராட்டத்திற்காக உயிர் நீத்த உழவர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இனி தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விடியா திமுக அரசு செய்து வரும் அவலங்களை பற்றி எடுத்துரைத்தனர் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி செய்தியாளர் அகிலன் சுப்பிரமணியன்.