கள்ளக்குறிச்சியில் முன்னாள் முதலமைச்சர் கல்வித்தந்தை காமராசர் பிறந்த நாள் நிகழ்ச்சி இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் எளவனாசூர் கோட்டையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கல்வித்தந்தை காமராசர் பிறந்த நாள் நிகழ்ச்சி இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது.
எளவனசூர் கோட்டை மும்முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் முனைவர்.
பேராசிரியர் கலந்துகொண்டு காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் செம்மலை, அஞ்சான், மணிராஜ் ,மோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் உளுந்தூர்பேட்டை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரத் தலைவர் நல்ல. குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டாரத் தலைவர்கள் முனைவர் சீனிவாசன் பெரியசாமி மற்றும் மூத்த நிர்வாகி காளிராஜ் நாகலிங்கம் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் மோகன்ராஜ் திருநாவலூர் வட்டாரத் தலைவர் ரவி மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மழை தூவி பொது மக்களுக்கு எழுப்பு வழங்கினார்கள்.
இறுதியாக காங்கிரஸ் கட்சியின் சேவா தல மாவட்ட தலைவர் மீடியா முருகன் நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி சுரேஷ்.