- முகப்பு
- சசிகலா தொடர்பாக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அதிமுக முன்னாள் அமைச்
சசிகலா தொடர்பாக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அதிமுக முன்னாள் அமைச்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா படம் பொறித்த கேக்கை வெட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர், மகளிர் அணி மாநில செயலாளர் பா.வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருபெரும் தலைவர்கள் இருக்கின்றனர் என்றும், சசிகலா தொடர்பாக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுப்படி கட்டுப்படுவோம் என்றும் தெரிவித்தார். மேலும், அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தோல்வி என்பது இயல்புதான், தோல்வி வெற்றிக்கான வழிகாட்டி எனவும் வளர்மதி குறிப்பிட்டார்.