• முகப்பு
  • குற்றம்
  • தடை செய்யப்பட்ட சுமார் 30 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன்

தடை செய்யப்பட்ட சுமார் 30 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன்

மாரிமுத்து

UPDATED: May 19, 2023, 11:53:06 AM

தூத்துக்குடியில் நறுமண பொருள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் திமிங்கலம் எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அணில், ஆனந்தராஜ், பெத்தேன், ஆகிய நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்து ஆம்பர் கிரிசை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரிசின் மதிப்பு ரூபாய் 30 கோடி என கூறப்படுகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended