திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்று விழா .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு பல்வேறு பகுதிகளான ஆதனூர் கிராந்தி மணல்மேடு இளவரசன் நல்லூர் இளவரசன் நல்லூர் மேலத்தெருவில் ஆலத்தம்பாடி கடைவீதி கரும்பியூர் பழையங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியேற்று விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கொடியேற்று விழா ஒன்றியக் கழகச் செயலாளர் பிரகாஷ் அவர்கள் தலைமை வகித்தார்
மாவட்டக் கழக துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையிலும் கொடியேற்ற விழாவில் சிறப்பாக நடைபெற்ற சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட கழக செயலாளர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களுக்கு பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டைகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பெண்கள் ஆரத்தி எடுத்தும் சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கழகக் கொடியினை பல்வேறு பகுதிகளில் கொடியினை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .
அதனை தொடர்ந்து ஆலத்தம்பாடி காந்தியம் வளாகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் விஏஓ ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் .
இணைந்த அனைவருக்கும் மாவட்ட கழக செயலாளர் கட்சி பலம் பொருந்திய சால்வை அணிவித்து புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.