• முகப்பு
  • india
  • மும்பைவிமான நிலையத்தில் ஐந்தரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள வெளி நாட்டுகரன்சி !

மும்பைவிமான நிலையத்தில் ஐந்தரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள வெளி நாட்டுகரன்சி !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ரூபாய் 5½ கோடி மதிப்புள்ள வெளி நாட்டு பணத்துடன் மும்பையில் இருவர்கைது செய்யப் பட்டுள்ளனர். சூடான் நாட்டைச்சேர்ந்த அகமதுமுகமது இஸ்மாயில்ஹராசா மற்றும் இசம்அலி அமர்முகமது ஆகிய இருவரும் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டனர். இதில் 7. 24 லட்சம் அமெரிக்கடாலர்கள் (சுமார் ரூபாய் 5.6 கோடி) கைப்பற்றப் பட்டன. இருவரும் செவ்வாய் கிழமை அதி காலை 4.05 மணிக்கு அடிஸ்அபாபா செல்லும் எத்தி யோப்பியன் ஏர்லைன்ஸ்விமானத்தில் விமானநிலையத்தை வந்தடைந்தனர். எனினும், விமானநிலையத்தில் பாதுகாப்புச்சோதனையில் அவர்களது கைப்பையில் வெளி நாட்டு நாணயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகள் சுங்கஅதிகாரிகளுக்கு தகவல் அளித்து இருவரையும் கைதுசெய்தனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended