ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவம்!
வாசுதேவன்
UPDATED: May 30, 2023, 6:36:34 PM
வேலூர் அருகே உள்ள ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வைகாசி விசாக தேர் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார்.
இரவு பூப்பல்லக்கில் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.