- முகப்பு
- pondichery
- பெஸ்ட் புதுச்சேரி என்ற திட்டத்தை விரைவாக செயல்படுத்த ஃபாஸ்ட் புதுச்சேரி திட்டம் .
பெஸ்ட் புதுச்சேரி என்ற திட்டத்தை விரைவாக செயல்படுத்த ஃபாஸ்ட் புதுச்சேரி திட்டம் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உலக அமைதி மற்றும் நன்மைக்காக புதுச்சேரி திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற யாகத்தில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்....
பிரதமர் மோடியின் எண்ணம் போல் ஆன்மீகம் தழைத்து ஓங்க வேண்டும் என்பதற்க்கு தகுந்தார்போல் புதுச்சேரியில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசியால் நாம் கொரோனா வை வென்றுள்ளோம் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து திட்டங்களையும் விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், புதுச்சேரி வருகை புரிந்த பிரதமர் மோடி பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றுவோம் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கான வேலைகளில் இந்த அரசு ஈடுபட்டு உள்ளது, அரசு அனுப்பும் கோப்புகளை விரைவாக கையெழுத்திட்டு அனுப்புவதற்கும், திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும் ஃபாஸ்ட் புதுச்சேரி என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..
சிலர் குற்றம் சாட்டுவது போல் இல்லாமல் புதுச்சேரி அமைதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது சபாநாயகர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனி. ஜெயக்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்
பேட்டி; தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்