• முகப்பு
  • tamilnadu
  • தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்ட பலன்களையும் பெறுவதற்கு விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - ஆட்சியர்.

தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்ட பலன்களையும் பெறுவதற்கு விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - ஆட்சியர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தோட்டக்கலைத் துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. வரும், 2022-23-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்யவேண்டும். “இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்கப்படும். இதற்காக விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்யவேண்டும். பதிவு செய்யத் தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் மா. இந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended