ரயில்களில் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம் - ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவு..!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ வரையும்
ஏசி2-டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ வரையும்.
ஏசி3-டயர் படுக்கை, ஏசி இருக்கை 40 கிலோ வரையும்,
இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொது வகுப்பில் பயணிப்பவர்கள் வெறும் 25 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்