• முகப்பு
  • other
  • ஶ்ரீபெரும்புதூரில் ராணுவ வீரர்களின் தியாகம் உணர்த்துவதற்கு கண்காட்சி.!!

ஶ்ரீபெரும்புதூரில் ராணுவ வீரர்களின் தியாகம் உணர்த்துவதற்கு கண்காட்சி.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஶ்ரீபெரும்புதூர் : நாட்டை காக்கும் ராணுவ வீரர்களின் மேன்மைமிகு தியாகங்களை உணர்த்தும் தியாகம் போற்றுவோம் கண்காட்சி காஞ்சிபுரம் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. ஶ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்ட அலுவலர் அர்.பிரேமலதா கண்காட்சியை திறந்து வைத்தார். இதில் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த வீரர்கள் அவர்களின் தியாகங்கள் சிறிய போர் மற்றும் தாக்குதல்களில் வீர மரணம் அடைந்தோர் பற்றிய குறிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பு படைகள் ராணுவ கிராமங்கள் வீரர்களின் புகழ்பெற்ற வரிகள் போர் நினைவிடங்கள் பற்றிய குறிப்புகள் ராணுவ வேலைவாய்ப்பு விபரம் உள்ளிட்டவை கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டிருந்தன. இதனை பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் கண்காட்சியை பார்த்து நெகிழ்ந்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்க்கொடி, எல்லை பாதுகாப்பு வீரர் கில்லி வளவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருள்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் ஶ்ரீபெரும்புதூர்,இன்றைய முக்கிய செய்திகள் ஶ்ரீபெரும்புதூர்,இன்றைய செய்திகள் ஶ்ரீபெரும்புதூர்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,Sriperumbudur news,Sriperumbudur news today tamil,Sriperumbudur flash news,Sriperumbudur news tamil today,Sriperumbudur latest news

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended