Author: School

Category:

இந்தியா உள்நாட்டிலேயே போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் அதிநவீன ஏசா ரக ரேடாரை சொந்தமாக தயாரித்துள்ளது. இதனை மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து சாதனை புரிந்துள்ளது. மேலும் இந்த ரேடார் நமது சொந்த தயாரிப்பான இலகுரக தேஜாஸ் மார்க்-1 மற்றும் கடற்படையின் மிக்-29, ஐந்தாம் தலைமுறை ஆம்கா ரக போர் விமானங்களில் இணைத்து பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் படையில் இணைய உள்ள 83 தேஜாஸ் விமானங்களும் இவற்றை பெற உள்ளன , இந்த ரேடார் மூலம் 100 கிமீ அல்லது அதற்கும் அதிகமான தொலைவில் உள்ள 50 இலக்குகளை அடையாளம் அறிந்து 4ஐ ஒரே நேரத்தில் குறிவைக்க முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

Tags:

Comments & Conversations - 0