Author: THE GREAT INDIA NEWS

Category: india

2021 - 22 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம். 2021 - 22 ம் ஆண்டிற்கான 8.1 சதவீதவட்டி விகிதத்தை வரவுவைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்து உள்ளது. 2021 - 22 ம் ஆண்டிற்கான தொழிலாளர்களின் வருங்காலவைப்புநிதி (இ.பி.எஃப்) வைப்புத் தொகையின் மீதானவட்டி விகிதம் 8.1 சதவீதமாக அரசு நிர்ணயித்து உள்ளது. இது நான்குபத்தாண்டுகளில் குறைவான வட்டிவிகிதம் என கூறப் படுகிறது. இந்தாண்டு மார்ச் ல், தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு 2021 - 22க்கான வருங்காலவைப்பு நிதிக்கான வட்டியை 2020 - 21 இல் வழங்கப் பட்ட 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக்குறைக்க முடிவுசெய்தது. இ.பி.எஃப்.ஓ அறிவித்த உத்தரவின் படி, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் இ.பி.எஃப் திட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2021 - 22 ம் ஆண்டிற்கான 8.1 சதவீதவட்டி விகிதத்தை வரவுவைக்க மத்தியரசின் ஒப்புதலைத்தெரிவித்து உள்ளது. இதற்காக தொழிலாளர் அமைச்சகம் தனதுஒப்புதலுக்கான முன் மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது. இது அரசாங்கத்தின் வட்டிவிகிதத்தை உறுதிப் படுத்திய பிறகு, இ.பி.எஃப் ஓ நிதியாண்டிற்கான நிலையானவட்டி விகிதத்தை அதன் கணக்குகளில் வரவுவைக்கத் தொடங்கும். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0