திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 37 ஆண்டு கால மாணவர்களின் முன்னிலையில் பணி நிறைவு பாராட்டு விழா.
இடும்பன்
UPDATED: May 30, 2023, 8:59:21 PM
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியர் A. மரிய ஜோசப் அவர்களுக்கு முன்னாள் இந்நாள் மாணவர்களின் செலவில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களின் பங்களிப்பின் மூலம் முன்னாள் இந்நாள் மாணவர்களின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா 30.5.2023 இனிதே நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை யாரும் கண்டிடாத மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வகையில் அவரிடம் 37 ஆண்டுகள் பயின்ற மாணவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மேளதாளங்கள் முழங்க ஆரவாரத்துடன் ஆசிரியரை மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்பு பரதநாட்டியம் சிலம்பம் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
37 ஆண்டுகள் 4 மாதங்கள் 28 நாட்கள் என தன் கல்விப் பணியினை செவ்வனே செய்து திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 25 ஆண்டு காலம் பணிபுரிந்து கல்விப் பணி சேவையை சிறப்பாக செய்தவர்.
2009இல் தமிழக அரசால் வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருது பெற்றவர் A.மரிய ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரிடம் பயின்ற மற்றும் உடன் பணியாற்றிய பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட முன்னாள் இந்நாள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டு மாலைகள் மற்றும் பொன்னாடைகளை அணிவித்து புகழாரம் சூட்டினார்கள்.
நன்றி உரையாக பள்ளியின் முன்னாள் மாணவிகள் ஆனந்தி, வேல்விழி மற்றும் அன்புக்கரசி ஆகியோர் நன்றியுரை வழங்கினார்கள்.
இறுதியாக விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் A.மரிய ஜோசப் அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.