திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்.
L.குமார்
UPDATED: May 21, 2023, 10:38:16 AM
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது தொடர்ந்து விடியா ஆட்சியின் அவல நிலை ஆளுநரிடம் எடுத்துரைத்து மணு அளிக்க செல்லும் கழக பொதுச் செயலாளர் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சி முன்னாள் எம்எல்ஏக்கள் கே எஸ் விஜயகுமார் பொன் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.