விருதம்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
வாசுதேவன்
UPDATED: May 26, 2023, 2:08:04 PM
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் பெரியார் திடலைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து பல மாடி கட்டடங்கள் கட்டப்பட்டன.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அந்தந்த வீட்டின் உரிமையாளர்களே அகற்றி கொள்ளும் வகையில் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் போதிய கால அவகாசம் வழங்கியது.
ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியில் ஈடுபடவே இல்லை.
இதனால் பொறுத்து பார்த்த மாநகராட்சி நிர்வாகம் காவல்துறை உதவியுடன் நேற்று காலை அதிரடியாக விருதம்பட்டு பெரியார் திடல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால் விருதம்பட்டு பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது. வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலத்தை சேர்ந்த மாநகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.