• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மதுபான தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் ஒன்பது பெண்கள் உட்பட 11 பேர் காயம்

மதுபான தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் ஒன்பது பெண்கள் உட்பட 11 பேர் காயம்

லட்சுமி காந்த்

UPDATED: May 19, 2023, 9:28:25 AM

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் சசிகலா அவர்களுக்கு சொந்தமான மதுபான தொழிற்சாலை இயங்கிவருகின்றது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றுக் கொண்டு படைப்பை நோக்கி சென்ற வேன் மாகரல் அடுத்த காவந்தண்டலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது .

அந்த வேனில் பயணம் செய்த 25 பேர்களில் 9 பெண்கள் , இரண்டு ஆண்கள் உட்பட மொத்தம் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் 108 வாகனத்தின் மூலம் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விபத்து குறித்து மாகரல் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended