எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லிக்குப்பத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
குமரவேல்
UPDATED: May 12, 2023, 8:58:34 AM
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகே இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டில் 7வது முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவரும்,
பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி (இ.பி.எஸ் ) பிறந்த நாளான மே-12 இன்று நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கி.காசிநாதன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் புனிதவதி, செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரபாகரன் வழக்கறிஞர் பஞ்சாபிகேசன், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.