Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

* நம் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் சரிசெய்ய நாம் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிகள்: 1. இனிப்பை முதலில் உட்கொள்ள வேண்டும் (செரிமான சுரப்பிகள் இயங்க தொடங்கும்) 2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்து உட்கொள்ள வேண்டும் 3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு முறையும் ஆறு சுவைகளையும் உட்கொள்வது மிகவும் சிறந்தது - முழு நெல்லிக்காய் மிக சிறந்த அறுசுவை கனி 4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து உதட்டை மூடி உட்கொள்ள வேண்டும். நொறுங்கத் தின்றால்120 வயது வரை வாழலாம். வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடியது உமிழ் நீர் கலந்த உணவு. உமிழ்நீர் கலந்த உணவை மட்டும்தான் நமது உடல் மருந்தாக மாற்றும். நாம் கூழ் போன்று மென்று உட்கொள்வது செரிமானத்தில் 20% மட்டுமே மிதம் உள்ள 40% பெருங்குடலாலும் அடுத்த 40% சிறு குடலாலும் செரிமானம் செய்யப்படுகிறது 5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று உண்ண வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும் 6. உணவு உட்கொள்ளும் போழுது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். உணவுகேற்ற உமிழ்நீர் சுரக்க இது உதவும் 7. உணவை கையால் எடுத்து உட்கொள்வது சிறந்தது. நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது. விரலில் ஜீரன சுரப்பிகள் உள்ளது 8. சாப்பிடும் முன் 30 நிமிடமும், சாப்பிடும் போழுதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் அருந்த கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் 500 வகை அமிலத்தை நீர்தது போக செய்து செரிமானத்தை தாமதபடுத்தும்). உமிழ்நீர் உணவில் கலந்திருந்தால் கண்டிப்பாக விக்கல் வராது 9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே உணவு உட்கொள்ள கூடாது கவணம் உணவில் மட்டுமே இருக்க வேண்டும் (கவணம் உணவில் இருந்தால்தான் உமிழ்நீர் சரியாகச் சுரக்கும்) 10. சம்மணமிட்டு உணவு உட்கொள்ள வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது சரியான முறை அல்ல. 11. தாய்மார்கள் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏனெனில் தாய்க்கு குழந்தை மீதே கவணம் அதிகம் இருக்கும் 12. உணவு உட்கொள்ளும் 30 நிடங்களுக்கு முன் தண்ணீர் அருந்துவது செரிமான சக்தியை அதிகரிக்கும் (உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் இதை பின்பற்றினால் விரைவில் உடல் பருமன் குறையும்). 13. உணவு உட்கொள்ளும் முன் கை கால் முகம் கழுவி் முக்கியமாக உள்ளங்கால் நனைத்து இருத்தல் நலம் 14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.30 மணி நேரம் குளிக்கக் கூடாது இதுசெரிமானத்தை பாதிக்கும் 15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம் 16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் 17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும் 18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்வது பற்களுக்கு ஆரோக்கியத்தை தரும் 19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது. 20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும் 21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும். 22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும் 23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும் 24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம் 25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது 26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் மாத்திரை உட்கொள்வதை தவிர்த்தல் நலம். எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது சிறந்தது 27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற விசயங்கள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறையை கண்டரிந்து சரிசெய்வது நலம் 29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு நிகழ்காலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம். 30.ஆண்டிற்கு சிலமுறை தினமும் செய்யும் வேலைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும் **************** அனுபவஸ்தன் ****************

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0