திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை.

JK 

UPDATED: May 7, 2023, 9:04:31 AM

திருச்சி மாவட்டம், சேனியகல்லிகுடி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் பாபு (28). இவர் சமயபுரத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினம்தோறும் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள மது கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். அதேபோல நேற்று இரவு அங்கு மது அருந்து சென்ற போது திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள வீ.துறையூர் சேர்ந்த சிலரும் அங்கு மது குடிக்க வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் ஏற்பட்ட வாய் தகராறில் பாபுவை அவர்கள் சரமாரியா வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தகவல் அறிந்து சமயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்வதில் ஏற்கனவே பாபு மற்றும் கொலையில் ஈடுபட்டவர்களுக்கு முன்விரதம் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended