- முகப்பு
- திண்டுக்கல் அருகே குடிநீரில் கழிவு கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே குடிநீரில் கழிவு கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபிநாத்
UPDATED: Mar 31, 2023, 2:03:40 PM
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் குட்டத்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலரின் அலட்சியம் காரணமாக மைலாப்பூரில் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மைலாப்பூரில் குடிதண்ணீர் குழாயானது பல வாரங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டுள்ளது. குழாயை சரி செய்யாததால் குடிதண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதால் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து புகைப்படங்களோடு ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி, ஊராட்சி செயலாளர் பிலவேந்திரனிடம் புகார் தெரிவித்தும் கடந்த இரண்டு மாத காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குடிநீர் இணைப்புக்கு டெப்பாசிட் பணம் கட்டியவர்களுக்கு இதுவரை ரசிது கூட ஊராட்சி மன்ற செயலர் வழங்கவில்லை இவ்வாறு இந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.