• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின், புதிய டீன் ஆக, டாக்டர் ரேவதி பாலன் பொறுப்பேற்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின், புதிய டீன் ஆக, டாக்டர் ரேவதி பாலன் பொறுப்பேற்பு!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 9, 2023, 10:38:52 AM

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய, ஐந்து தென் மாவட்டங்களில் இருந்து, நோயாளிகள் அதிக அளவில், வந்து செல்லும் மருத்துவமனையாக, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை திகழ்ந்து வருகிறது.

இத்தகு பெருமைமிகு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின், "டீன்" ஆக, இதுவரையிலும் பணியாற்றி வந்த, டாக்டர் எம்.ரவிச்சந்திரன், பணி மூப்பு காரணமாக, சென்ற மாதம் (ஏப்ரல்) 30-ஆம் தேதி பணியில் இருந்து, "ஓய்வு" பெற்றார்.

இதையடுத்து, துணை முதல்வர் டாக்டர் சுரேஷ், "டீன்" பொறுப்புகளை, கவனித்து வந்தார். இந்நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "டீன்" ஆக, பணியாற்றி வந்த டாக்டர் சி.ரேவதி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை "டீன்" ஆக, பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின், புதிய "டீன்" ஆக, டாக்டர் சி.ரேவதி பாலன், நேற்று (மே.8) காலையில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் ஏற்கனவே, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், "துணை முதல்வர்" ஆக, சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தகக்கது ஆகும்.

புதிய"டீன்" பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் ரேவதி பாலனை, சக டாக்டர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஹவுஸ் சர்ஜன்கள் உள்ளிட்டோர், பொன்னாடைகள் அணிவித்தும், பூங்கொத்துகள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்கியும், கை குலுக்கியும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள், தெரிவித்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended