- முகப்பு
- மருத்துவம்
- மருத்துவமாமணி' விருது பெற்ற, திருநெல்வேலி இருதய நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் இ.அருணாச்சலத்துக்கு, பாராட்டு விழா!
மருத்துவமாமணி' விருது பெற்ற, திருநெல்வேலி இருதய நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் இ.அருணாச்சலத்துக்கு, பாராட்டு விழா!
மேலப்பாளையம் ஹஸன்
UPDATED: May 30, 2023, 7:47:42 PM
திருநெல்வேலி வ.உ.சி இலக்கிய மாமன்றம் சார்பில், "கவிதை உறவு" மாத இதழ் வழங்கிய, 'மருத்துவ மாமணி' விருது பெற்ற, திருநெல்வேலி இருதயநோய் மருத்துவ டாக்டர் இ.அருணாச்சலத்துக்கு, பாராட்டு விழா நேற்று (மே.29) மாலையில், நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
வ.உ.சி இலக்கிய மாமன்றத் தலைவர் "புளியரை" எஸ்.ராஜா தலைமை வகித்தார். அகவை முதிர்ந்த கவிஞர்கள் பேரவை தலைவர் ந. சுப்பையா, இறை வணக்கம் பாடினார். மாமன்றத் துணைச் செயலாளர் கவிஞர் சு.முத்துசாமி அனைவரையும், வரவேற்று பேசினார்.
பேராசிரியை "முனைவர்" சொர்ணலதா முன்னிலை உரை, நிகழ்த்தினார். "கவிதை உறவு" நெல்லை பிரிவு அமைப்பாளர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தொடக்க உரை, ஆற்றினார்.