தங்க தமிழ்ச்செல்வன் திமுகவிலிருந்து விலகுகிறாரா?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச் செல்வன் தேனியிலிருந்து போடி நாயக்கனூர் சட்டமன்றதொகுதிக்கு உட் பட்ட பூதிப்புரம் கிராமம்வழியாக செல்லும் சாலைநெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி கட்டு ப்பாட்டில் உள்ளது,
இந்த சாலையை நெடு ஞ்சாலைத்துறையே முழுமையாக எடுத்துக்கொண்டு சீர்செய்து தர வேண்டும். மேலும் ஆதிபட்டிகிராமம் வழியாகசெல்லும் புதிய புற வழிச்சாலையில் பூதிப்புரம்கிராம மக்கள் பயணிக்க வேண்டும்.
என்றால் பல கி.மீ தொலைவு உள்ளது. எனவே பூதிப்புரம்கிராம மக்களுக்கு ஏதுவாக புற வழிச்சாலை இணைக்கும் விதமாக இணைப்புச்சாலை ஒன்றை அமைக்கவேண்டுமென ஆட்சியரிடம் வலியுறுத்தி கோரிக்கைமனு வழங்கியுள்ளோம்.
என்னைப்பற்றி சமூகவலைதளங்களில் வரும்கருத்துக்கள் அதிகப் படியான பார்வையாளரை பெறு கின்றது.
இதில் சிலர் நான்ராஜ்யசபா எம்.பி.யாகப்போகிறேன் எனக்கூறி வந்தனர்.
தற்போது நான் தி.மு.க.விலிருந்து விலகி விட்டதாக அவதூறு செய்தி ஒன்றையும் பரப்பி உள்ளார்கள்.
இது குறித்து சைபர் கிரைம் பிரிவில் அளித்து உள்ள புகாரின்பேரில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும்.
தேனி தி.மு.க ஒருங்கிணைந்த மாவட்டமாகமாற்றப் படும் என்ற யூகத்திற்கு எல்லாம் பதிலளிக்க முடியாது.
தேனியைப்பொருத்தவரை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களிலும் உள்ளாட்சித்தேர்தலில் அமோகவெற்றியை பெற்றுள்ளோம்.
எங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை எனத்தெரிவித்தார்.
செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி