மீஞ்சூர் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞர் அணி தெருமுனை கூட்டம்.
L.குமார்
UPDATED: May 28, 2023, 10:09:02 AM
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞர் அணி தெருமுனை கூட்டம் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆகியோர் தலைமையில் மீஞ்சூர் பஜாரில் பேரூர் கழக செயலாளர் காசு தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் மில்லர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமைகளாக பேச்சாளர் சிங்கை பிரபாகரன் கலந்துகொண்டு திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கங்களை பொது மக்களுக்கு எடுத்து கூறி விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, இதில் மாவட்டத் துணைச் செயலாளர் கதிரவன், பேரூராட்சித் துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் மீஞ்சூர் சசிகுமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.