• முகப்பு
  • அரசியல்
  • திமுக நிர்வாகிகள், பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ.

திமுக நிர்வாகிகள், பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ.

மகேந்திரன்

UPDATED: May 22, 2023, 7:34:25 PM

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் முதன் முதலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார் கதிரவன்.

பதவியேற்றது முதல் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கைகளுக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் சட்டமன்ற அலுவலகத்தில் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்துகோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

அதன் ஒருபகுதியாக சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

அந்த மனுக்களை பொதுமக்களிடம் நேரடிடியாக பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தொகுதி மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் உறுதியளித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended