கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
குமரி ஒற்றன்
UPDATED: May 17, 2023, 9:15:06 PM
கன்னியாகுமாரி மாவட்டம் : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் இரண்டு வாரம் இருக்கும் நிலையில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நடைபெற்றது.
78 பள்ளிகளில் சேர்ந்த 396 வாகனங்களுக்கு சோதனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வராத பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.