ஜல் சக்தி அபியான் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நாள்: 14.06.2022
திருவாரூர் மாவட்டம் புதிய இரயில் நிலையத்தில் சுயஉதவிக்குழுக்கள் பங்கேற்ற நீர் மேலாண்மை (ஜல் சக்தி அபியான்) குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
இப்பேரணியில் நிலத்தடி நீரை பாதுகாத்தல்,மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் நீர் கட்டமைப்புகளை மீள்நிரப்புதல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை சுயஉதவிக்குழுக்கள்; ஏந்தி சென்றனர்.
பேரணியில் 100க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது புதிய இரயில் நிலையத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஷ்வரி, பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.