• முகப்பு
  • district
  • பெண் பயணிக்கு அவமரியாதை: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் .

பெண் பயணிக்கு அவமரியாதை: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கரூர் மாவட்டம் நகர பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை, அப்பேருந்தின் ஓட்டுநர் பன்னீர்செல்வமும், நடத்துநர் மகேந்திரனும் அவமரியாதையாக நடத்தியதாக புகார் எழுந்தது. பெண் பயணி ஒருவர் தனது பொருட்களை ஏற்றி விட்டு, குழந்தையையும் பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர், அந்த பெண் எழுவதற்குள் முன்பாக, பேருந்தை ஓட்டுநர் இயக்கி சிறிது தூரம் சென்று விட்டார். ‘குழந்தை... குழந்தை’ என்று கத்திக்கொண்டே அந்தப் பெண் ஓடியதால், அருகில் இருந்த பொதுமக்கள் அந்த பேருந்தை துரத்தி பிடித்து முற்றுகையிட்டு நிறுத்தினர். அப்போது, இலவச பயணச் சீட்டில் வரக்கூடிய பெண் பயணியை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் முடிந்தபின், இருவரும் காரைக்குடி மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended