• முகப்பு
  • district
  • பல மாத காலமாக பழுதடைந்த வாகனத்தால் வட்டாட்சியர் பணிக்கு செல்வதில் சிரமம்

பல மாத காலமாக பழுதடைந்த வாகனத்தால் வட்டாட்சியர் பணிக்கு செல்வதில் சிரமம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரின் அரசு வாகனம் சில மாதங்களுக்கு முன்பாக முற்றிலுமாக பழுதடைந்த நிலையில் வட்டாட்சியர் வளாகத்தில் ஓரங்கட்டப்பட்டு உள்ள நிலையில் அரசு வாகனம் இல்லாததால் வட்டாட்சியர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்கும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லுவதற்கு அரசு வாகனம் இல்லாததால் வாடகை வாகனத்தில் செல்லும் நிலையில் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பொருளாதார சிக்கல் மட்டும் இல்லாமல் சில நேரங்களில் அரசு விழாக்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கிராமங்களுக்கு செல்வதில் மிகவும் சிரமப்பட்டு வருவது மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளில் தனியார் வாகனத்தில் செல்லும்போதுவிழா மேடை அருகே விடுவதில்லை இதனால் வட்டாட்சியர் சரியான நேரத்தில் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார் . ஆகையால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வட்டாட்சியர் அவர்களின் வாகனத்தை சரி செய்து தரவேண்டும் அல்லது புதிய வாகனம் வழங்க வேண்டும் என வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்பு. கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended