சத்தியமங்கலம் வரதம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருகம்பம் திருவிழாவில் பாவங்களைப் போக்க சாட்டையடி வாங்கிய பக்தர்கள்.
மகேஷ் பாண்டியன்
UPDATED: May 24, 2023, 7:13:26 PM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் வன்னியர் குல சத்திரியர் சமூக குலதெய்வங்களான அருள்மிகு பத்ரகாளி அம்மன், அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு மாகாளியம்மன் ஆகிய ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் குண்டம் மற்றும் திருக்கம்பம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 11ம் தேதி காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து அன்று இரவு அருள்மிகு மாரியம்மன் கோவில் முன்பு திருக்கம்பம் நடுவிழா நடைபெற்றது. முன்னதாக கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்துவரப்பட்ட அரச மரத்தால் தமிழகத்திலே மிக உயரமான 20 அடி உயரத்தில் திருகம்பம் வடிவமைக்கப்பட்டு ஆலயத்தின் முன்பு திருக்கம்பம் நடப்பட்டது.
தினந்தோறும் காலை திருகம்பத்திற்கு பெண்கள் தினந்தோறும் புனித நீர் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டு வந்தனர்.
இரவு நேரங்களில் வரதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேளதாளம் இசைக்கேற்ப பாரம்பரிய நடனம் ஆன திருகம்பத்தை சுற்றி நடனமாடி மகிழ்ந்தனர்.
ஆலயத்தின் முக்கிய விழாவான அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை 25ஆம் தேதி காலை 8 மணி அளவில் குண்டம் திருவிழா நடைபெறுகிறது அன்று இரவு அருள்மிகு மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே எடுக்கப்படும் அம்மன் நகை பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சட்டையை எடுத்து பூசாரி ஒருவர் பக்தர்களை சாட்டையால் அடித்தார்.
இந்த சாட்டையடி வாங்குவதால் நம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சாட்டையடி வாங்கினர்.