• முகப்பு
  • tamilnadu
  • பாழாய் போன ஆசிரியப்பணி அர்ப்பணி அழிந்து போ நீ....

பாழாய் போன ஆசிரியப்பணி அர்ப்பணி அழிந்து போ நீ....

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது பொன்மொழி பெற்றோர் சரியாக அமைந்தால் நல்ல பிள்ளைகள் கிடைப்பார்கள். ஒரு ஆசிரியர் சரியாக அமைந்து விட்டால் நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். தெய்வங்களும் மண்ணில் தென்படுவார்கள். எழுத்தறிவிப்பனை இறைவனாகப்பார்த்தது அந்தக்காலம்., ஏளனமாகபார்ப்பது இந்தக் காலம் இரண்டு மூன்று பட்டங்கள் வாங்கியும் வேலையில்லை, போட்டித் தேர்வுகளும் தகுதித்தேர்வுகளும் வெறும் தேர்வுகளாக மட்டும்...... யாரையும் தேர்வு செய்வதாக இல்லை. அரசியல்வாதிகள் பொய் வேஷம் போடுகிறார்கள். பாடம் சொல்லப் படித்தவனுக்கு தினம் ஒரு பாடம் சொல்லித்தருகிறார்கள். போராடினால்தான் முடிவினை எட்டிடமுடியும் என்றமுடிவில் வெறுமையில் தற்கொலைசெய்து கொண்ட மனங்களை மறைத்துக்கொண்டு வெற்று உடல்களாய் போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சக உதிரங்கள் வரலாற்றில் இடம் பிடிக்கட்டும் . சோதனைகளை சாதனையாகட்டும். இளைய சமுதாயத்தின் வேர்களில் சிகிச்சை செய்ய வந்தவர்களை வீதிகளில் நிறுத்தியது யாரதுகுற்றம்? நாளைய தூண்களை செதுக்கபோகிறவர்களை நாளும் சிதைப்பது எந்த விதத்தில் நியாயம்? தேர்வுகள் வைக்கப் பிறந்தவர்களை தேர்வுகள்வைத்தே சாகடிக்காதீர்கள். பகுதி நேர ஆசிரியர்களாய் பாழாய் போனவர்களை படுகுழியில் தள்ளாதீர். மென்மேலும் தொகுப்பதிய பணிகளா? அரசியல்வாதிக்கு கொண்டாட்டம். பாமரனுக்கு திண்டாட்டம். படித்தவனின்வறுமை நாட்டின்வறுமை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணி நிரந்தர ஆணை வழங்கி அவர்கள் இளைப்பாறவும் கொஞ்சம் இடம் கொடுங்கள். ***அனுபவஸ்தன்***

VIDEOS

RELATED NEWS

Recommended