Author: THE GREAT INDIA NEWS

Category: district

என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் காந்தி சிலை அருகே 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியாயவிலைக் கடை பணியாளர் களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் ரேஷன் பொருட்கள் இறக்கும்போது இறையாமலும் பொதுமக்களுக்கு வழங்கும்போது குறையாமலும் வழங்குவதற்கு அனைத்து ரசிகர்களும் பாக்கெட் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் காந்தி சிலை அருகே வட்ட செயலாளர் ராஜகோபால் தலைமையில் கோரிக்கைகளை முழங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் ஒன்றியங்களில் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

Tags:

#இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kallakurichinewstodaytamil #kallakurichiflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0