Author: THE GREAT INDIA NEWS

Category: district

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருக்கோவிலூர் டி.மண்டபம் கிராமத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களிடம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சீனிவாசனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் , அவர் மீது 11 ஆண்டு காலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அதிகாரிகள் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் . உளுந்தூர்பேட்டை அடுத்த மடப்பட்டு கிராமத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனை ஆக்கிரமிக்க நினைக்கும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு பயனாளிகளுக்கு மீண்டும் பட்டா வகை மாற்றம் செய்து வழங்க வேண்டும். நாச்சியார் பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலை நடத்தாமல் அளித்துவரும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து, கல்வராயன் மலைப் பகுதியில் பழங்குடியினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் பல மாதங்கள் சிறையில் இருந்து விடுதலையானவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் . மற்றும் வடக்கனந்தல் மற்றும் அக்கராபாளையம் பகுதியிலுள்ள அருந்தினர் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #nlc #neyvelinlc #peoplestruggle
Comments & Conversations - 0